மீண்டும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை.

​விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள், இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்களால் முற்பதிவுக்கான பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை நீண்ட வரிசைகளை உருவாக்கியுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.



எரிபொருள் விநியோகம் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அடுத்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருட்களினதும் மேலதிக பங்குகளையும் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அடுத்த 2 நாட்களில் எரிபொருள் வரிசைகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!