இன்று முதல் வழமைக்கு திரும்பும் தனியார் போக்குவரத்து.....

இன்று முதல் தனியார் பஸ் வண்டிகள் வழமை போன்று போக்குவரத்தில் ஈடுபடும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார்.

தனியார் பஸ் வண்டிகளுக்கு தற்சமயம் எரிபொருள் போதியளவு கிடைக்கின்றது. எனவே எதிர்காலத்தில் எதுவித தடையும் இன்றி தனியார் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டார்.

வழமைக்கு திரும்பும் போக்குவரத்து

இன்று முதல் வழமைக்கு திரும்பும் தனியார் போக்குவரத்து | Sri Lanka Fuel Crisis Transport

முறையாக எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விரைவில் இடம்பெறவுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் 50 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!