வெளிவிவகார அமைச்சர், எகிப்து தூதுவர் சந்திப்பு.

 

இலங்கைக்கான எகிப்து தூதுவர் மகேத் மொஸ்லே, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை வெளிவிவகார அமைச்சில் நேற்று சந்தித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் சப்ரி மற்றும் தூதர் மோஸ்லே ஆகியோர் பன்முக இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

தற்போதைய முன்னேற்றங்கள், நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இந்த சவால்களை சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதுவர் மொஸ்லேவிடம் அமைச்சர் சப்ரி விளக்கினார்.

தற்போதைய உலக முன்னேற்றங்கள் மற்றும் இரு நாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் இதன் போது லந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65 ஆவது ஆண்டு நிறைவு விழா அடுத்த வருடம் சிறப்பாக கொண்டாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!