இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (29) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
• #நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’. • எப்படி? இதுவரை எமக்கு கிடைத்த மனித குலத்தின் வரலாற்று தகவல்கள் சகலவற்றையும் ஆய்வு செய்ததில், கிடைத்த முடிவுகள் இவை. இந்த ஆய்வு முடிவுகளை தரவுகளாக,வரைபடங்களாக கீழே தந்திருக்கிறேன். இந்த ஆய்வு முடிவுகளினூடாக இன்றைய உலக ஒழுங்கை,அதன் இயங்கும் விதத்தை வேறொரு கோணத்தில் உங்களுக்கு விளக்க முனைவதே இந்த பதிவின் நோக்கம். • #நவீன அரசுகள் (States) எனது பல பதிவுகளில் குறிப்பிட்டதையே மறுபடியும் சொல்கிறேன். இந்த உலகின் மிகப் பலம் வாய்ந்த நிறுவனம் இறையாண்மையுள்ள அரசுதான் ( States). இவைகளை மிஞ்சிய அதிகார அமைப்பு வேறு எதுவும் உலகில் இல்லை. இந்த உலகம், இன்று இருக்கும் 190 சொச்ச இறையாண்மையுள்ள அரசுகளால் இயங்குவது. இவையே நம்முடைய International System இன் Main Actors. இந்த அரசுகளில், அவற்றின் பொருளாதார,இராணுவ வலிமையை அடிப்படையாக கொண்டு அவற்றிற்குள் அடுக்குகள் இருக்கின்றன. ஆனால் இன்றைய உலக ஒழுங்கின் இயக்கமே இந்த அரசுகளை ஆதாரமாக வைத்துத்தான் இயங்கு...
ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது. நாட்டில் தீவிரமடைந்துள்ள துப்பாக்கி பிரயோகங்களை தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக மக்கள் போராட்டத்தை முடக்க ஆயிரகணக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுப்படுத்தப்படுகிறார்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எனக்கு முன்னதாக பேசிய அமைச்சர் யாழ்ப்பாண பிரதேசத்தில் வெங்காய உற்பத்தியைப் பற்றிக்கூறினார். அவர்களுக்கு மண்ணெண்ணெய் கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக அந்த மக்கள் மண்ணெண்ணெய் இல்லாது பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். விவசாயிகள் நீரிறைக்கும் இயந்திரத்துக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தங்களது படகு ...
"தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அடங்கிய புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களில் எதிரணியினராகிய நாம் உறுதியாக இருக்கின்றோம்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அடங்கிய புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களில் எதிரணியினராகிய நாம் உறுதியாக இருக்கின்றோம். இந்த விடயங்கள் நிறைவேற்றப்பட்டால் பொருளாதார நெருக்கடியும் நீங்கும். ஏனெனில் இந்த விடயங்களில் வெளிநாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உறுதியாக உள்ளன. அவை நிறைவேறியவுடன் சர்வதேச சமூகம் தாமாகவே முன்வந்து எமது நாட்டுக்கு உதவி வழங்கும். புலம்பெயர் தமிழ் மக்களும் எந்தவித அச்சமும் இன்றி நாட்டுக்கு வந்து முதலீடுகளை வழங்கி உதவி செய்வார்கள். ஆனால், மேற்படி விட...
Comments
Post a Comment