இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (29) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள் - சார்ள்ஸ் எம்.பி. சீற்றம் "வனஇலாகா, வனஜீவராசிகள், மகாவலி, தொல்பொருள் ஆகிய நான்கு திணைக்களங்களும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. தொல்பொருள் திணைக்களத்தை ஒரு சில பௌத்த பிக்குகள்தான் வழிநடத்துகின்றனர்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "மகாவலி அபிவிருத்தி அதிகார சபை 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது முழுமையாகத் தமிழர்களது இன விகிதாசாரத்தை இல்லாதொழிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 1988 ஆம் ஆண்டு மகாவலி எல் வலயம் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டு இன்று 34 வருடங்கள் முடிவடைந்திருக்கின்றன. அதில் வவுனியா, முல்லைத்தீவு உள்ளடங்களாக பல பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்கமைய வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் தென்பகுதி மக்களுக்கு வழங்கும் செயற...
ஆளுங்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) விசேட உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது கொள்கையின்றி செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் கொள்கை உரை இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை உரையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இன்று இந்தக் கட்சியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் அவர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார். பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அலகப்பெரும, டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் சன்ன ஜயசுமன, கே.பி.எஸ் குமாரசிறி, குணபால ரத்னசேகர, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, மருத்துவர் உபுல் கலப்பத்தி, மருத்துவர் திலக் ராஜபக்ஷ, லலித் எல்லாவல ஆகியோரே இவ்வாறு சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
ஆசிய கோப்பை போட்டியில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியாவும், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தானும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன. இன்று நடைபெறும் 5-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும். இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று இருந்தன.
Comments
Post a Comment