சஜித்தின் சகோதரியின் திடீர் முடிவு - குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற்றம்

 


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலஞ்சலி பிரேமதாச தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

குற்ற புலனாய்வு பிரிவு விசாரணை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை எரித்து அழித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சம்பவத்தின் போது அவர் அங்கு இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே சஜித் பிரேமதாசவின் சகோதரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.



Comments

Popular posts from this blog

நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.

அரசியல் தீர்வில் எதிரணி உறுதி - ராஜித எம்.பி. கருத்து

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே