• #நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’. • எப்படி? இதுவரை எமக்கு கிடைத்த மனித குலத்தின் வரலாற்று தகவல்கள் சகலவற்றையும் ஆய்வு செய்ததில், கிடைத்த முடிவுகள் இவை. இந்த ஆய்வு முடிவுகளை தரவுகளாக,வரைபடங்களாக கீழே தந்திருக்கிறேன். இந்த ஆய்வு முடிவுகளினூடாக இன்றைய உலக ஒழுங்கை,அதன் இயங்கும் விதத்தை வேறொரு கோணத்தில் உங்களுக்கு விளக்க முனைவதே இந்த பதிவின் நோக்கம். • #நவீன அரசுகள் (States) எனது பல பதிவுகளில் குறிப்பிட்டதையே மறுபடியும் சொல்கிறேன். இந்த உலகின் மிகப் பலம் வாய்ந்த நிறுவனம் இறையாண்மையுள்ள அரசுதான் ( States). இவைகளை மிஞ்சிய அதிகார அமைப்பு வேறு எதுவும் உலகில் இல்லை. இந்த உலகம், இன்று இருக்கும் 190 சொச்ச இறையாண்மையுள்ள அரசுகளால் இயங்குவது. இவையே நம்முடைய International System இன் Main Actors. இந்த அரசுகளில், அவற்றின் பொருளாதார,இராணுவ வலிமையை அடிப்படையாக கொண்டு அவற்றிற்குள் அடுக்குகள் இருக்கின்றன. ஆனால் இன்றைய உலக ஒழுங்கின் இயக்கமே இந்த அரசுகளை ஆதாரமாக வைத்துத்தான் இயங்கு...
"தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அடங்கிய புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களில் எதிரணியினராகிய நாம் உறுதியாக இருக்கின்றோம்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அடங்கிய புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களில் எதிரணியினராகிய நாம் உறுதியாக இருக்கின்றோம். இந்த விடயங்கள் நிறைவேற்றப்பட்டால் பொருளாதார நெருக்கடியும் நீங்கும். ஏனெனில் இந்த விடயங்களில் வெளிநாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உறுதியாக உள்ளன. அவை நிறைவேறியவுடன் சர்வதேச சமூகம் தாமாகவே முன்வந்து எமது நாட்டுக்கு உதவி வழங்கும். புலம்பெயர் தமிழ் மக்களும் எந்தவித அச்சமும் இன்றி நாட்டுக்கு வந்து முதலீடுகளை வழங்கி உதவி செய்வார்கள். ஆனால், மேற்படி விட...
ஐம்பதாண்டுகள் கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகள் වම සහ ජීවිතය சிறியின் நேரடி காட்சிகள் நூல் வெளியீடு நட்புறவுடனான கலந்துரையாடல் கலாநிதி சுமனசிறி லியனகே விரிவுரையாளர் சாயிநாதன் விமல் விதர்சன கன்னங்கர புபதி நலீன் திகதி- 2022 - 09 -13 ( செவ்வாய்க்கிழமை ) நேரம்-மாலை 3.30 மணி முதல் இடம்- கொழும்பு 07 தேசிய நூலக ஆவணாக்கல் சபை கேட்போர் அரங்கில் தொடர்புகளுக்கு : 071407955 - 0777443684
Comments
Post a Comment