சஜித் அணியினருக்கு ஐ.தே.கவினர் அழைப்பு.


"சஜித் பிரேமதாஸ உட்பட கட்சியில் இருந்து வெளியேறியோர் மீண்டும் தாய்வீடு திரும்பலாம். அதற்கு எவ்வித தடையும் இல்லை.”


- இவ்வாறு ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினரும் ஜனாதிபதியின் பாதுகாப்பு விவகார ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 


"எமது கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் தாய்க் கட்சியுடன் இணைந்து கொள்வதில் தடையே இல்லை. ஆனால், நாங்கள் எந்தக் கட்சியில் இருந்தும் உறுப்பினர்களை கவர்ந்து இழுக்க மாட்டோம். விரும்பியோர் வரலாம் என்பதே எமது கொள்கை" - என்றார்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!